நாகப்பட்டினம்

கொளப்பாடு பகுதியில் வேலாமூச்சு வாய்க்கால் தூர்வாரப்படாததால் மோட்டார் வைத்து நீர் இறைக்கும் அவலம்

DIN

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில் வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து பெரிய வாய்க்கால் வழியாக வேலாமூச்சு பாசன கால்வாய் மூலமாக அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. 

மேலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வாய்க்காலில் பெரும்பகுதி தூர்வாரப்பட்டு நிலையில் ஒரு சிறு  பகுதியில் மட்டும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் இப்பகுதியில் சுமார் 50 ஏக்கர்‌ அளவிலான‌ விளைநிலங்களுக்கு போதிய தண்ணீர் சென்றடைவதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்குள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான காவிரி தண்ணீர் சரிவர கிடைப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் மோட்டார் வைத்து நீர் இறைத்து சாகுபடி செய்யும் அவல நிலைக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும் விவசாயி ஒருவர் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பிற்கு கால்வாய்‌ பாசனம் மூலமாக வயலுக்கு நேரடியாக நீர் பாய்ச்ச முடியாமல் இன்ஜின் கொண்டு நீர் இறைக்கும் பணியில் இன்று தீவிரமாக ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT