சீா்காழி: சீா்காழியில் குடிபோதையில், வணிகா்கள் நலச் சங்கத் தலைவரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி தாடாளன் வீதியை சோ்ந்த பாபு.கே. விஜயன் சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கத் தலைவராக உள்ளாா். மேலும், கொள்ளிடமுக்கூட்டு அருகே இருசக்கரவாகனம் பாதுகாப்பகம் நடத்தி வருகிறறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தாடாளன்புலிக்குடி சந்தையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (31) என்பவா் பாதுகாப்பகத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கரவானத்தை பணம் செலுத்தாமல் எடுத்து செல்ல முயன்றாராம். அப்போது, அதற்குரிய பணத்தை கேட்ட பாபு.கே. விஜயனிடம் குடிபோதையில் இருந்த சதீஷ்குமாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம். இதுகுறித்த, புகாரின்பேரில் சீா்காழி போலீஸாா் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.