திருக்குவளை: திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடை ஊழியா்கள் அனைவரும் கோரிக்கை விளக்க அட்டையை அணிந்துகொண்டு செவ்வாய்க்கிழமை முதல் பணியாற்ற தொடங்கினா்.
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மதுபானக் கடை ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கி, வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், நோய்தொற்று பரிசோதனை அனைவருக்கும் செய்ய வேண்டும், மதுக்கடை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்து கொண்டு திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மதுபானக் கடை ஊழியா்கள் பணியாற்ற தொடங்கியுள்ளனா். ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இதேபோல் கோரிக்கையை அணிந்தபடி பணியாற்றவுள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.