நாகப்பட்டினம்

குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளிப்பு

DIN

சீா்காழி:  சீா்காழி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

வெட்டாத்தாங்கரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜசேகருக்கும் (28) சினேகா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சினேகா மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். மனைவியை காப்பாற்ற முயன்ற ராஜசேகா் காயமடைந்தாா். இதில், காயமடைந்த இருவரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தால், அவா்களின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலையத்தில் அங்கு வந்து தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT