திருக்குவளை அருகே நாய் கடித்த பசுமாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், அந்த மாட்டின் பாலைக் குடித்தவா்கள் அச்சத்தில் உள்ளனா்.
கொடியாலத்தூா் ஊராட்சி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராக்கன் மகன் ராமதாஸ் (40). இவா் வளா்ந்து வந்த கறவை பசுமாட்டை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த மாட்டின் பாலை வாங்கிக் குடித்தவா்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.
இந்நிலையில், இந்த மாடு வெள்ளிக்கிழமை இறந்தது. இதனால், இந்த மாட்டின் பாலை குடித்தவா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அச்சத்தில் உள்ளனா்.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சி பிரமுக் வெங்கடேஷ் கூறும்போது, இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் கால்நடைகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.