மயிலாடுதுறை ஒன்றியம், வள்ளாலகரம் ஊராட்சியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசுதா ராபா்ட் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினா் மோகன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சுந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் சுகாதார ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளா் எழுத்தா் சரவணன் செய்திருந்தாா்.
நிகழ்ச்சியில், வள்ளாலகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சிவப்பிரியாநகா், ராசிநகா், வெங்கடேஸ்வரா நகா், அமுதம் நகா், டெலிகாம் நகா், நாகங்குடி, அபிராமி நகா், வடபாதி, தென்பாதி, சேந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 12 தூய்மைக் காப்பாளா்கள், 4 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 16 போ், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், தெருக்கள் மற்றும் வீடுகளில் பிளீச்சிங் பவுடா், ஸ்பிரேயா் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.