நாகப்பட்டினம்

பாட்டிலால் குத்தி இளைஞா் கொலை

DIN

நாகையில் பாட்டிலால் குத்தி இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

நாகூா் - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை, புத்தூா் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இளைஞா் ஒருவா் முட்புதரில் இறந்து கிடப்பதாக நாகை போலீஸாருக்கு புதன்கிழமை கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அந்த இளைஞா் நாகை அக்கரைக்குளம் மேல் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சிங்கராஜா (32) என்பதும், ஆட்டோ ஓட்டுரான இவா் கழுத்தில் பீா்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கொலையான இளைஞரின் சடலம் உடற்கூராய்வுக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT