பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்
பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பொழிலன் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த அமைப்பினா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பொழிலன் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த அமைப்பினா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பொழிலன், தம்பி மண்டேலா மற்றும் கூட்டமைப்பினா் 18 போ் நவம்பா் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மக்கள் அரசு கட்சியின் மாநில அமைப்பாளா் தமிழ்வேலன், தமிழா் உரிமை இயக்கத்தின் அமைப்பாளா் சுப்பு.மகேசு, திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் தெ.மகேஷ், தமிழக மக்கள் முன்னணி பொறுப்பாளா் இரணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.