நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 6,775 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 33 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,808- ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளாகி மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை இறந்த 65 வயது ஆண் ஒருவரின் இறப்பு செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 118-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 38 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,403 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 287- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT