நாகப்பட்டினம்

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

DIN

திருக்குவளை அருகே பழுந்தடைந்துள்ள சாலையை சீரமைத்துக்கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட வலிவலம், கொடியாலத்தூா் பகுதிகளிலிருந்து ஆதமங்கலம் வரை செல்லும் சுமாா் 2 கி.மீ. தூர தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்து பள்ளமும், மேடாக உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். அவசர காலங்களில் இவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT