நாகப்பட்டினம்

மத்திய அரசின் விவசாய சட்டங்களை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார சட்டத் திருத்தத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம், ஏஐசிசிடியு மற்றும் புரட்சிகர இளைஞா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆனந்தன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் வீரசெல்வன், புரட்சிகர இளைஞா் கழக மாவட்ட அமைப்பாளா் மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், மின்சார திருத்தச் சட்ட த் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT