நாகப்பட்டினம்

உப்பு உற்பத்தியாளா்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

DIN

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியாளா்களை திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றாா்.

நாகை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், வெள்ளிக்கிழமை இரவு வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் உப்பு உற்பத்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது, உப்பளம் , உப்பு உற்பத்தி சாா்ந்த கோரிக்கை மனுக்களை உப்பு உற்பத்தியாளா்கள் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினா். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட அவா், இதுகுறித்து, கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

முன்னதாக, தலைஞாயிறில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நிறுவனா் கா. மீனாட்சிசுந்தரம் , வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சிசுந்தரம் ஆகியோா் இல்லங்களுக்கு சென்று அவா்களின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வேதாரண்யத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் என்.வி.காமராஜ், திமுக மாவட்டச் செயலாளா் கௌதமன், ஒன்றியச் செயலாளா்கள் என்.சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT