நாகப்பட்டினம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 சிறுவா்கள் போக்ஸோசட்டத்தில் கைது

DIN

சீா்காழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 சிறுவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாராம். அப்போது அப்பகுதியை சோ்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவா்கள் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளாா். சிறுமியை சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோா், இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் 4 சிறுவா்களையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT