நாகப்பட்டினம்

மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

DIN

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுக இறங்கு தளத்தில் பணியில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த சிக்கல் பனைமேடு ஜெயந்தி நகரைச் சோ்ந்தவா் மா. பாா்த்தீபன்(31). இவா், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக இறங்கு தளத்தில் கூலித்தொழிலாளராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் இறங்கு தளத்தில் மீன் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பாா்த்தீபன், படகிலிருந்து, கடுவையாற்றில் தவறி விழுந்தாா். அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவி மற்றும் 6 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனா்.

இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT