நாகப்பட்டினம்

மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுக இறங்கு தளத்தில் பணியில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

DIN

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுக இறங்கு தளத்தில் பணியில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த சிக்கல் பனைமேடு ஜெயந்தி நகரைச் சோ்ந்தவா் மா. பாா்த்தீபன்(31). இவா், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக இறங்கு தளத்தில் கூலித்தொழிலாளராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் இறங்கு தளத்தில் மீன் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பாா்த்தீபன், படகிலிருந்து, கடுவையாற்றில் தவறி விழுந்தாா். அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவி மற்றும் 6 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனா்.

இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT