கோப்புத்துறையில் விவசாயி ஒருவரின் நிலத்தில் அரிய வகை மண்ணுளி பாம்பு பிடிபட்டது.
நாகை மாவட்டம், தோப்புத்துறை வன துர்க்கையம்மன் கோயில் பகுதியில் விவசாயி ஒருவரது நிலத்தில் காணப்பட்ட மண்ணுளி பாம்பு ஒன்று பிடிபட்டது.
இதனை மீட்ட கோடியக்கரை வனச்சரக அலுவலர் குமரேசன் உள்ளிட்ட வனத்துறையினர் மீட்டு கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.