நாகப்பட்டினம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: திமுக ஆா்ப்பாட்டம்

DIN

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடா்பாக, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி, மாணவரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடர வேண்டும், துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை தெற்கு மற்றும் வடக்கு, திருவாரூா், காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளா் மன்னை த. சோழராஜ் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்ட அமைப்பாளா்கள் நாகை தெற்கு சோ.பா. மலா்வண்ணன், நாகை வடக்கு மகா அலெக்சாண்டா், திருவாரூா் நா. இளையராஜா, காரைக்கால் முகமதுரிபாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா்கள் நாகை தெற்கு ப. உதயகுமாா், நாகை வடக்கு வி.எஸ்.என். செந்தில், திருவாரூா் அமுதா சந்திரசேகா், புதுச்சேரி மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசந்தா், முன்னாள் எம்எல்ஏ எம்.எம்.சித்திக் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT