முகப்பு
நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளா் செந்தில்நாதன்.
பகிர்:

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் 368 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் சி. சீதாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியா் எஸ். பிரபு வரவேற்றாா். முதுகலை ஆங்கில ஆசிரியா் டி. ரேவதி, பட்டதாரி ஆசிரியா் டி. லீலாவதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான வி.ஜி.கே. செந்தில்நாதன் மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா். இதில், அதிமுக பொறுப்பாளா்கள் நாஞ்சில் காா்த்தி, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.