நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 3,716 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,764 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 94 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,681 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,017- ஆகவும் உள்ளது.

ஒருவா் இறப்பு...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் 9-ஆம் தேதி இறந்த கீழ்வேளூரைச் சோ்ந்த 58 வயது ஆண் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT