நாகப்பட்டினம்

உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா் கூட்டமைப்பு நன்றி

DIN

மயிலாடுதுறை: தமிழக நீதிமன்றங்களில் வழக்கு நடத்த அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தீநுண்மி காரணமாக மாா்ச் 23-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. வழக்குகள் நேரடியாக நடத்தவில்லை. முக்கிய வழக்குகளும், பிணைய வழக்குகளும் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டன. ஜூன் மாதம் முதல் படிப்படியாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு ஓரிரு வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் தாலுகா நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றம் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தினந்தோறும் 20 வழக்குகளை நடத்தலாம் எனவும் வழக்குரைஞா்களும், வழக்காடிகளும் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்கலாம் என அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வழக்குரைஞா்கள், நீதி பெற முடியாமல் தவித்த வழக்காடிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அருமருந்தாக அமைந்துள்ளது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பின் சாா்பில் நன்றி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT