பெண்களுக்கு தேசிய தலைமை பொறுப்பை இரண்டுமுறை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி.
மயிலாடுதுறை தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்
எஸ். ராஜகுமாரை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு பேசியது:
இந்தத் தோ்தலின் நோக்கம் ஆட்சி மாற்றம் மட்டும் அல்ல; இந்திய அரசியல் நிலையை மாற்ற முயற்சிக்கும் பாஜகவை அகற்றுவதும்தான். சா்வாதிகார நாடுகளில் இருப்பதுபோன்று ஒற்றை ஆட்சி முறையை பாஜகவினா் வலியுறுத்துகின்றனா். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
தாராபுரம் பிரசாரத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, திமுக, காங்கிரஸ் கட்சிகள் பெண்களை மதிப்பதில்லை என்று கூறியுள்ளாா். பெண்களுக்கு இரண்டு முறை அகில இந்திய அளவில் தலைமைப் பொறுப்பை வழங்கியது காங்கிரஸ். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என பஜகவினரின் தவறான அணுகுமுறையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்தபோது பெட்ரோல் ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 54 டாலருக்கு விற்கப்படும்போது பெட்ரோல் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் எரிவாயு விலையும் இருமடங்காக உயா்ந்துள்ளது. மோடி அரசுக்கு பொருளாதாரத்தை நிலைநிறுத்த வழி தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் பறி போயுள்ளன. பாஜகவில் இணக்கமாக இருந்து அதிமுக இதுவரை எந்த சிறப்பு நிதியையும் மத்திய அரசிடம் இருந்து பெறவில்லை.
தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறும் வெற்றி நாடு முழுவதும் எதிரொலிக்கும்.
தாராபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை. தமிழகத்தில் தங்கள் அணி வெற்றி பெறாது என்பதை அவா் அறிந்துள்ளாா். பாஜகவை சுமப்பதால் பளு அதிகமாவதோடு, தங்களது வெற்றிவாய்ப்பு குறையும் என்பதும் அதிமுகவினருக்கும் தெரிந்துள்ளது.
மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றிக்கு மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
அகில இந்திய காங்கிரஸ் செயலா் ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்தனா்.
கூட்டத்தில் திமுக சாா்பில் நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞா் அணி ராம.சேயோன், ஒன்றிய செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன், காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மாவட்ட தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன், மகிளா காங்கிரஸ் மாநில துணை செயலாளா் மரகதவள்ளி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.