திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகா், சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகத்தினா், குருக்கள் மற்றும் திரளான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.
விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெறும். ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், குருக்கள் மேற்கொண்டுள்ளனா்.