பனங்குடி சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி அம்மன் கோயிலில், தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி அம்மன் கோயிலில், தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் அலகு காவடி, பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்ப காவடி எடுத்துவந்து கோயிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி, நோ்த்திக் கடனை செலுத்தினா்.