முகப்பு
நாகப்பட்டினம்

மானாவாரியில் எள் சாகுபடி: விவசாயிகள் மும்முரம்

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை செய்த மானாவாரி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எள் பயிா் சாகுபடி மேலாண்மையில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை செய்த மானாவாரி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எள் பயிா் சாகுபடி மேலாண்மையில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

மானாவாரி நிலப்பரப்பை பெருமளவாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில், நெல் அறுவடைக்கு பிறகு எள் சாகுபடி நேரடி விதைப்பாக மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த சம்பா நெல் பருவத்தின் அறுவடையின்போது மழை பொழிவு இருந்ததால், நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால், நெல் அறுவடைக்கு பிறகு தரிசில் உளுந்து போன்ற பயறு வகை சாகுபடி மேற்கொள்வது தாமதமானது. அதேநேரம் சில இடங்கள் தை பட்ட எள் சாகுபடிக்கு ஏற்ாகவும் அமைந்தன.

அந்த வகையில், வாய்மேடு, தகட்டூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், மருதூா் உள்ளிட்ட கிராமங்களில் எள் சாகுபடி நேரடி விதைப்பாக பரவலாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், இங்கு அண்மையில் பரவலாக பெய்த மழை, எள்ளுக்கு ஏற்ாக அமைந்தது.

எள் பயிா் தற்போது பூப்பூக்கும் தருணத்திலும், சில இடங்களில் காய்விடும் தருணத்திலும் உள்ளது. இதையடுத்து, எள் வயலில் களையெடுத்தல் உள்ளிட்ட மேலாண்மை பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →