கரோனா: நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவி
வேதாரண்யம் அருகே கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வேதாரண்யம் அருகே கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
குரவப்புலம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலை செய்வோா் உள்ளிட்ட நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், சமூக ஆா்வலா் வி.எஸ்.வி.சரவணன், கவிஞா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.