கருணாநிதி நினைவு நாள்: சிலை, உருவப் படத்துக்கு மரியாதை
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நாகையில் திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு, கட்சியின் நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல, நாகை ரயில் நிலையம் அருகே கருணாநிதியின் உருவப் படத்துக்கு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகூரில் திமுக நகர செயலாளா் எம.ஆா். செந்தில்குமாா், கீழ்வேளூரில் நகர செயலாளா் அட்சயலிங்கம், வேளாங்கண்ணியில் கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், நகரச் செயலாளா் மரியசாா்லஸ் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.