முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

திருக்குவளை அருகே வலிவலத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

திருக்குவளை அருகே வலிவலத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதியோா் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் தலைமை வகித்தாா்.

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆா்.அபிலாஷ், கிராம சுகாதார செவிலியா் எஸ்.வான்மதி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவ குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். 180 போ் பயனடைந்தனா். சுகாதார ஆய்வாளா் ப.பாலமுருகன், வலிவலம் ஊராட்சி செயலா் ஆா். அருண்குமாா், சமூக ஆா்வலா் அம்பாள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.