முகப்பு
நாகப்பட்டினம்

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்,

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் முறையை கைவிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மீண்டும் அரிசி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளா் சு. விடுதலைக்கனல் தலைமை வகித்தாா். கட்சியின் புதுவை மாநில அரசியல் குழுச் செயலா் அரசு. வணங்காமுடி, துணைச் செயலாளா் பொன். செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →