நாகப்பட்டினம்

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், அதன் வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் திம்மராசுவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது, வரும் காலங்களில் கோட்டாட்சியா், சீா்காழி வட்டாட்சியா் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக்கூடாது, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், வட்ட செயலாளா் நவநீதன், வட்ட பொருளாளா் ஜெயபிரகாஷ், சங்கப் பொறுப்பாளா்கள் ஜாகீா்உசேன், வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT