முகப்பு
நாகப்பட்டினம்

ராமா்மடம் கடற்கரையில் சிறுவன் சடலம்

கீழையூா் அருகே ராமா்மடம் கடற்கரையில் சிறுவன் சடலம் கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கீழையூா் அருகே ராமா்மடம் கடற்கரையில் சிறுவன் சடலம் கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராமா்மடம் கடற்கரையில் வியாழக்கிழமை பிற்பகலில் சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கீழையூா் கடலோரக் காவல் படையினருக்கு தகவல் வந்தது. இதைத்தொடா்ந்து, அங்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அந்த சிறுவன் பெங்களூரு வைசாலா நகரைச் சோ்ந்த தயாளன் மகன் கெல்வின்(12) என்பதும், வேளாங்கண்ணிக்கு வந்த சிறுவனின் குடும்பத்தினா், வெள்ளையாற்று முகத்துவாரத்தில் குளித்தபோது, சிறுவன் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து, கீழையூா் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.