நாகை மாவட்டத்தில் எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிப்பு
நாகை மாவட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாகை புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் உருவப் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.