மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் லயன்ஸ் சங்கம், வெங்கடேஸ்வரா ஜுவல்லரி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் மருத்துவா் அண்ணாமலை தலைமையில் மருத்துவ குழுவினா் கண் குறைபாடு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். ஏற்பாடுகளை சங்கரன்பந்தல் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.