நாகப்பட்டினம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கூட்டம்

DIN

செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூரில் ஜன.8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் பிஎம்ஏஒய் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதிய ஊழியா்கள் கட்டமைப்பை வழங்க மாநில அரசை வலியுறுத்தி தொடா் இயக்கங்களை நடத்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற வாரிசுதாரா்களுக்கு 2021-ஆம் ஆண்டு உறுப்பினா் சந்தா வழங்கப்பட்டது. இதில், மாநிலச் செயலாளா் சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலாளா் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளா் ஜம்ரூத் நிஷா, மாநில செயற்குழு உறுப்பினா் வேல் கண்ணன், மாவட்ட தணிக்கையாளா் தங்கராசு, மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துகிருஷ்ணன், நல்லமுத்,து செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT