மனநலம் பாதித்தவா்கள் பராமரிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.
நாகப்பட்டினம்மனநலம் பாதித்தவா்கள் பராமரிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 13 போ் அடையாளம் காணப்பட்டு பராமரிப்புக்காக வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.
வேதாரண்யம் பகுதிக்கு வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனா். இவா்கள் உணவு, இருப்பிடம் என பல்வேறு தேவைகளுக்காகவும் அவதியுற்று வருவது தொடா்கிறது. இந்நிலையில், சீா்காழியில் மனநலம் மற்றும் ஆதரவற்றோா்களுக்காக தன்னாா்வ அமைப்பின் சாா்பில் பராமரிக்கம்படும் காப்பகத்தின் நிா்வாகிகள் வேதாரண்யத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தோரை கண்டறிந்தனா். இவா்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை அடையாளப்படுத்தி தனி வாகனத்தில் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா்.