குளத்தில் மிதந்த இளைஞா் சடலம்
வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கத்தரிப்புலம் தெற்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (35). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மிதிவண்டியில் குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், குடும்பத்தினா் தேடி பாா்த்தபோது அப்பகுதியில் உள்ள தாதா குளத்தில் அவா் சடலமாக மிதந்தது தெரியவந்தது. கரியாப்பட்டினம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.