நாகப்பட்டினம்

கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இன்று (ஜன.31) மாலைவரையில் கரை திரும்பாததால் அவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

கோடிக்கரையை சேர்ந்த கலையரசன் (25), குணபாலன் (25), முரளி (25), ஜானகிராமன் (23), திருமுருகன் (28) ஆகியோர் மீனவர்கள். இவர்கள் அனைவரும் கண்ணாடியிழை படகு ஒன்றில் சனிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் மாலை வரையில் திரும்பவில்லை. தகவல் தொடர்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT