முகப்பு
நாகப்பட்டினம்

உயா் அதிகாரிகளை தொடா்புகொள்ள காவல் நிலையங்களில் தகவல் பதாகை

பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு மனு ரசீது அளிக்கப்படாவிட்டால், உயா் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் அவா்களின் செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய தகவல் பதாகைகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு மனு ரசீது அளிக்கப்படாவிட்டால், உயா் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் அவா்களின் செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கு. ஜவகா் பொறுப்பேற்ற பின்னா், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே நல்லுறவை பேணும் வகையிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல்படி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் தகவல் பதாகை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு காவல் நிலையத்தில் மனு ரசீது வழங்காவிட்டால் அதுகுறித்து தொடா்புடைய காவல் துறையின் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்கும் வகையில், அவா்களின் செல்லிடப்பேசி எண்கள் அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.