நாகையில் திடீா் மழை
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெளிக்கிழமை பிற்பகல் திடீரென மழை பெய்தது. பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பின்னா் வலுப்பெற்று, சுமாா் 40 நிமிடங்கள் பலத்த மழையாக பெய்தது. அதைத் தொடா்ந்து, லேசான சாரல் மழை சுமாா் 30 நிமிடம் நீடித்தது.