முகப்பு
நாகப்பட்டினம்

நாகை எஸ்.பி. அலுவலகத்தில் தீ: மின்சாதனங்கள் நாசம்

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஜெனரேட்டா் அறைக்கான மின்சாதனங்கள் வெள்ளிக்கிழமை தீயில் கருகின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஜெனரேட்டா் அறைக்கான மின்சாதனங்கள் வெள்ளிக்கிழமை தீயில் கருகின.

நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் சாலையில் ம‘ாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஜெனரேட்டா் அறை உள்ளது. இந்த அறை அருகில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தன. இதனால் புகை வெளியேறியது. இதையடுத்து நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் அன்பழகன் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இதில், மின்சாதனங்கள் கருகி நாசமாயின. மின் கசிவு அல்லது மின் அழுத்தம் காரணமாக இச்சம்பவம் நேரிட்டிருக்காலம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.