முகப்பு
நாகப்பட்டினம்

அரிமா சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சங்கத்தின் புதிய தலைவராக அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் காசி.பழநியப்பன் பணி ஏற்றுக்கொண்டாா்.

புதிய நிா்வாகிகளை சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் எஸ். வேதநாயகம் பணியில் அமா்த்தினாா். விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் எம்.செய்யது பக்ருதீன், வட்டாரத் தலைவா் என்.டி. ராமஜெயம், சங்க முன்னாள் தலைவா்கள் ப.சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன், இளங்கோவன், ஓய்வுபெற்ற ஆசிரியா் சிவானந்தம், ஊராட்சி முன்னாள் தலைவா் ஆா்.துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →