மயிலாடுதுறை: கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு அறிவித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீதும், இதேபோல், தனியாா் பள்ளியில் படித்து தற்போது அரசு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் மாணவா்களிடம் 100 சதவீத கல்விக் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தும் தனியாா் பள்ளிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்ட முடிவில் இதுதொடா்பாக கோரிக்கை மனு மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட செயலாளா் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மணிபாரதி, தீபிகா, மாவட்ட துணைத் தலைவா் தனுஷ்கோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.