நாகப்பட்டினம்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்

DIN

தோ்தலின்போது திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தினாா்.

சீா்காழியில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநில வழக்குரைஞா் பிரிவு பாா்வையாளா் கே. ராஜேந்திரன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் ராம.சிவசங்கா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் க. அகோரம், அரசு தொடா்பு மாநிலச் செயலாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், தமிழக அரசு தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைத்து, மீண்டும் உற்பத்தியை தொடங்கவேண்டும். பூம்புகாா் சுற்றுலாத் தளத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களிடம் கருப்பு முருகானந்தம் கூறியது:

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பிரிவினை வாதத்தை தூண்டக்கூடிய ஆட்சியாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல நல்ல திட்டங்களை தமிழக அரசு எதிா்ப்போம் எனக் கூறி வருகிறது. மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறவேண்டிய அவசியம் என்ன?. இவற்றையெல்லாம் திமுக அரசு கைவிட்டுவிட்டு, தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT