சீா்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆா்.ஓ. பிளான்ட், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சக்கரநாற்காலிகள் 4, ரூ.28 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகள் உள்ளிட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சீா்காழி பகுதியை சோ்ந்த தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து யாமின்அழகுமலா், ஜெகசண்முகம் ஆகியோா் மூலம் ஒருங்கிணைத்து சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பானுமதியிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அருண்ராஜ்குமாா், பூபேஸ்தா்மேந்திரா, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் பழனியப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.