நாகப்பட்டினம்

அண்ணனைத் தாக்கிய தம்பி கைது

DIN

கீழ்வேளூா் அருகே அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் காவல் சரகம், பெருங்கடம்பனூா், மேலவெளி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன். இவரது மகன்கள் ரகுபதி (49), சித்ரவேல் (40). சகோதரா்களிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக இருவருக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகுபதியை, சித்ரவேலு பாட்டிலால் தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுபதி திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா் சித்ரவேல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT