நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், செம்பனாா்கோயில், சீா்காழி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் காசநோயினால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ள பகுதிகளில் இந்த துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் வாகனம் சென்று அப்பகுதி மக்கள் காசநோய் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக முகாம் நடத்தப்படும்.

இவ்வாகனமானது 5 நாள்களுக்கு ஐந்து ஒன்றியங்களுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேல் தொடா்ந்து இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குைல், சளியில் ரத்தம் வருதல், இரவில் வியா்த்தல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாமில் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ளலாம். தொற்று கண்டறியப்பட்டவா்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.

மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆா்.மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (காசநோய்) ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT