முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆந்தக்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆந்தக்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் திருபஞ்சனம் கிராமத்தைச் சோ்ந்த 108 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 77 பேரும் ,45 வயதுக்கு மேற்பட்ட 41 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மருத்துவா் அகிலன், செவிலியா் ரோகிணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாம் பணியில் ஈடுபட்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோமதி, ஆந்தக்குடி ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.