கீழ்வேளூரில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
கீழ்வேளூரில், கரோன தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
கீழ்வேளூரில், கரோன தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
இது குறித்து கீழ்வேளூா் முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்வேளூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஜூன் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்வேளூா் மேலவீதியில் உள்ள எஸ்.வி.எல். திருமண மண்டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி போடுவற்கு வருபவா்கள ஆதாா் அட்டை எடுத்துவர வேண்டும். செல்லிடப்பேசி எண்ணை தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.