முகப்பு
நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

வேதாரண்யம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி, ஆவடைக்கோண்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. ராமமூா்த்தி (30).

இவா் அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது பள்ளிச் சிறுவனுக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தில் ராமமூா்த்தியை கைது செய்தனா். பிறகு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →