ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது குறித்து...
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஒரே நேரத்தில் பல இந்திய அணிகள் டி20 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு நம்மிடம் திறமைசாளிகள் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி கடந்த மார்ச். 8ஆம் தேதி அகமதாபாத் திடலில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததால், சூர்யகுமார் கேப்டனாகப் பொறுப்பேற்றார். 2026 உலகக் கோப்பை வென்றுள்ள சூர்யகுமார் யாத , பிடிஐ உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது:
திறமையைப் பற்றி பேச வேண்டுமானால், இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டே இருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் இருக்கிறது, கிளப் கிரிக்கெட் இருக்கிறது, உள்ளூர் போட்டிகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வீரர்கள் வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். அதனால், நான் டி20 பற்றி பேசும்போதே கூட டி20க்கு அணிகளைத் தேர்வு செய்யலாம். அதனால், திறமைக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் 2, 3 பிளேயிங் லெவனை உருவாக்கி விளையாட வைக்கலாம். இந்த உண்மையைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை என்றார்.