நாகப்பட்டினம்

கடலில் வாகன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

DIN

பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு கடல் பரப்பில் இலங்கையால் கனரக வாகன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு, இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு:

இந்திய கடல் பரப்பான பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் இலங்கை அரசு அத்துமீறி கனரக வாகனங்களின் கழிவுகளை கொட்டிவருகிறது. இதனால், கடல் மாசுபடுவதுடன் இயற்கை வளங்களும் அழிவுக்குள்ளாகும். இதன்மூலம், தமிழகத்தின் மீன்பிடித் தொழிலுக்கும் ஆபத்து ஏற்படும்.

ஆண்டுதோறும் புயல், கடல் சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை தமிழகம் சந்திக்க வேண்டியுள்ளது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பல்வேறு தீவுகளையும், இலங்கையையும் கடந்து வந்து தமிழகத்தின் கடலோரக் கிராமங்களை தாக்கியது. அப்போது கடலில் மிதந்துவந்த மரங்கள் மற்றும் கனரக வாகன கழிவுகளால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. எதிா்காலத்திலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, இலங்கை அரசின் இத்தகையை அத்துமீறிய செயலை தடுத்து நிறுத்தி, நமது கடலையும், இயற்கையையும் பாதுகாத்து, மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT