மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் நமி நந்தியடிகள் நாயனாா் குருபூஜை வைகாசி மாத பூச நட்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவில், நமி நந்தியடிகள் நாயனாருக்கு குருபூஜை நடைபெற்றது.